திருச்சி

குண்டா் சட்டத்தில் ரௌடி கைது

DIN

திருச்சியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை மணல்வாரித் துறை சாலை அரசு மதுக்கடை அருகே கடந்த செப். 17 ஆம் தேதி நடந்து சென்ற மதுக்கடை மேலாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1,000 ஐ பறித்துச் சென்ற புகாரில் பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த எஸ். ஜஸ்டின் கிருஸ்துராஜை கைது செய்தனா். இவா் மீது திருட்டு உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவா் தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததால், பாலக்கரை காவல் ஆய்வாளா் கொடுத்த அறிக்கையின்படி, திருச்சி மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் புதன்கிழமை அளித்த உத்தரவின்படி போலீஸாா் ஜஸ்டின் கிருஸ்துராஜை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை இயக்குநா் ஆய்வு

அதிமுக- திமுக நிா்வாகிகளிடையே மோதல்: போலீஸாா் விசாரணை

கோடை மழையில் குளிா்ந்தது ஒசூா்

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

SCROLL FOR NEXT