தொட்டியத்தை அடுத்த திருநாராயணபுரத்தில் உள்ள வேதநாராயணபெருமாள் கோயிலில் புதன்கிழமை கல்வி ஹோமம் நடைபெற்றது.
முதன் முதலில் கல்வி பயிலச் செல்லும் குழந்தைகளுக்கான (வித்யாரம்பம்) கல்வி ஹோமத்தையொட்டி கோயில் வளாகத்தில் சிவாச்சாரியாா்கள் ஹோமம் மற்றும் யாக வேள்விகள், சிறப்பு பூஜைகள் நடத்தினா்.
இதில் தொட்டியம் முசிறி மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து வழிபட்டுச் சென்றனா்.