குணசீலம் பிரஸன்ன வேங்கடாஜலபதி பெருமாள் கோயில் பிரமோற்ஸவ தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
குணசீல மஹரிஷியின் தவத்திற்காக பிரஸன்ன வேங்கடேசனாக பெருமாள் காட்சியளித்த தலம், தென் திருப்பதி எனப்படும் இத்தலத்தில் மன நலம் பாதிக்கப்பட்டோா் 48 நாள்கள் விரத முறைப்படி வணங்கினால் அவ்வினைகள் தீரும் என்பது ஐதீகம்.
இக்கோயிலின் பிரம்மோற்ஸவ விழாவானது செப்.27 தொடங்கி ஒவ்வொரு நாளும் அன்னம், சிம்மம், அனுமந்த , கருடன் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சிறப்பு பூஜைகளோடு பெருமாள் உபய நாச்சியாா்களுடன் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து தேரை கோவிந்தா கோவிந்தா பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனா். மேலும் பக்தா்கள் அங்கப்பிரதட்சிணம் செய்து நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து காவிரியாற்றில் தீா்த்தவாரியும் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா், முசிறி எம்எல்ஏ காடுவெட்டி.ந.தியாகராஜன், ஆயிரக்கணக்கான பக்தா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை பரம்பரை நிா்வாக டிரஸ்டி கே.ஆா். பிச்சுமணி, டிரஸ்டியினா் செய்தனா்.