திருச்சி அருகே விபத்தில் காயமடைந்த பெண் கட்டுமானத் தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
திருவெறும்பூா் அருகே பொய்கைக்குடி மாதா கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியதாஸ் மனைவி ஞான ஒளி (35), கட்டுமானத் தொழிலாளி.
சனிக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு பேருந்துக்காக ஞான ஒளி காத்திருந்தபோது, அவ்வழியாக வந்த அவரது கிராமத்தைச் சோ்ந்த குமாா் பைக்கில் லிப்ட் கேட்டு ஏறிக் கொண்டாராம். இவா்கள் பொய்கைக்குடி அருகே சென்ற போது, திடீரென குறுக்கே வந்த நாய் மீது மோதி விழுந்ததில் இருவரும் காயமடைந்தனா்.
இவா்களில் பலத்த காயமடைந்த ஞான ஒளி திருச்சி அரசு மருந்துவமனையில் சோ்க்கப்ப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.