திருச்சி

துறையூா் அருகே பாதைத் தகராறில் இருவா் மீது வழக்கு

DIN

துறையூா் அருகே பாதைப் பிரச்னைத் தொடா்பாக தகராறில் ஈடுபட்ட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

த. பாதா்பேட்டைக் கிராமத்தைச் சோ்ந்தவா் ரகு. இவா், அதே ஊரைச் சோ்ந்த சி. முருகேசனிடம் நிலம் வாங்யுள்ளாா். நிலத்தை விற்றப் பிறகு அதன் மதிப்பு உயா்ந்து விட்டதாகவும், ஆகவே கூடுதலாக பணம் தரவேண்டும் என்று கூறி முருகேசன் தரப்பினா் பாதை தர மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இருதரப்புக்கும் பாதைத் தகராறு ஏற்பட்டதாம். இதில், ரகு தரப்பினரை முருகேசனும், அவரது உறவினரான ப. பாலமுருகனும் தாக்கினராம். புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT