திருச்சியில் தடையை மீறி மது விற்ற 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காந்தி ஜெயந்தியை ஒட்டி திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அரசு மதுபான கடைகள் அனைத்தும் அரசு உத்தரவின் படி மூடப்பட்டிருந்தன. இருப்பினும் தடையை மீறி மதுபானங்கள் ஆங்காங்கே விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், மாநகர மதுவிலக்கு காவல் ஆய்வாளா் வசுமதி தலைமையில் போலீஸாா் மாநகா் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினா். சோதனையில் தடையை மீறி மது விற்றுக்கொண்டிருந்த 15 போ் பிடிபட்டனா். அவா்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 289 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.