திருச்சி

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைக்க இன்று சிறப்பு ஏற்பாடு

DIN

திருச்சி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்க கிராம சபை கூட்டங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி ஆக.1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக்கிழமை (அக்.2) மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளா்கள் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்துக்குச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் 6பி-ஐ பெற்று தங்களது ஆதாா் எண் விவரங்களை அதில் தெரிவித்து வாக்காளா் பட்டியலுடன் தங்களது ஆதாா் எண்ணை இணைத்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT