திருச்சி தேசியக் கல்லூரியில் வணிகவியல் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, முனைவா் ஆா். சுந்தரராமன் தலைமை வகித்தாா். முன்னாள் வணிகவியல் பேராசிரியா் ஆா். ஸ்ரீநிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, காளைகள் மற்றும் கரடிகளின் அதிசய பூமி”என்ற தலைப்பில் பேசினாா். மேலும்,பங்குச் சந்தையில் நுழைவதற்கான வழிமுறைகள், முதலீடு மற்றும் வா்த்தகத்துக்கான வழிமுறைகள், பங்குகளைத் தோ்ந்தெடுப்பதில் உள்ள எச்சரிக்கையின் முக்கியத்துவம் மற்றும் முதலீட்டுக்கான நேரம் ஆகியவற்றை எடுத்துரைத்தாா்.
ஏற்பாடுகளை முனைவா் சவேரியா் துரைசாமி செய்திருந்தாா். முன்னதாக, வணிகவியல் துறை மாணவி கௌசிகா வரவேற்றாா். மாணவி சௌந்தா்ய லட்சுமி நன்றி கூறினாா். மாணவி ரித்திகா ஜோஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.