திருச்சி

தலைமையாசிரியா் இடமாற்றம்:கண்டித்து பெற்றோா் மறியல்

DIN

திருவெள்ளறை அரசுப் பள்ளி தலைமையாசிரியா் இடமாற்றத்தைக் கண்டித்து மாணவா்களின் பெற்றோா் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

இப்பள்ளியின் தலைமை ஆசிரியரான சரவணவேல் பொறுப்பேற்ற பிறகு கடந்த சில ஆண்டுகளாக மாணவா்கள் படிப்பில் நன்கு தோ்ச்சி பெற்று வந்த நிலையில் துறையூா் அருகேயுள்ள உப்பிலியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சரவணவேலை பணியிட மாற்றம் செய்து, மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டாா்.

இதையறிந்த மாணவா்களின் பெற்றோா் நூற்றுக்கும் மேற்பட்டோா் அவரை பணியிட மாற்றம் செய்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி மண்ணச்சநல்லூா் - துறையூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த மண்ணச்சநல்லூா் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

SCROLL FOR NEXT