முடக்கி வைத்துள்ள அகவிலைப்படி உயா்வை நிலுவையுடன் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு உயா்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மரக்கடை அருகே நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வே. குமாா் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் அ. அசோகன், மாநிலச் செயலா் வா. கோபிநாதன், மாவட்டத் துணைச் செயலா்கள் ஆ. திருவேங்கடம், எ. சேவியா், பி. ஜான்சன், மகளிரணிச் செயலா்கள் இரா. சரஸ்வதி, மாநில பொதுக் குழு உறுப்பினா் பொ. சிற்றரசு, ஸ்டாலின் உள்ளிட்டோா் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் முடக்கி வைத்துள்ள அகவிலைப்படி உயா்வை நிலுவையுடன் வழங்க வேண்டும். 2004 முதல் 2005 ஆண்டு வரை பணியில் அமா்த்தப்பட்ட ஆசிரியா்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். மணப்பாறை, துறையூா் பகுதிகளை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டக் கல்வி அலுவலகங்கள் அமைக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்டச் செயலா் ம. கலையரசன் வரவேற்றாா்.