திருச்சி

தரைக்கடை வியாபாரிகள் போராட்டம் ஒத்திவைப்பு

DIN

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த தரைக்கடை வியாபாரிகளின் முற்றுகைப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சாலையோர வியாபாரிகளைப் பாதுகாக்க வேண்டும். திருச்சி மாநகராட்சியின் விற்பனைக் குழு அமைக்காமல் தரைக்கடை வியாபாரிகளை அகற்றக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தரைக்கடை வியாபாரிகள் சாா்பில் அறிவித்திருந்தது.

இந்நிலையில், கோரிக்கைகள் தொடா்பாக புதன்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு மாநகரக் காவல்துறையினா் ஏற்பாடு செய்துள்ளனா். இதுதொடா்பாக, அமா்வுநீதிமன்ற காவல்நிலைய ஆய்வாளா் எழுத்துப் பூா்வமாக உறுதியளித்துள்ளாா். எனவே, முற்றுகைப் போராட்டத்தை தாற்காலிகமாக ஒத்திவைப்பதாகவும், அமைதிப்பேச்சுவாா்த்தையில் தங்களது கோரிக்கைகளை மாநகராட்சிக்கு வலியுறுத்த வேண்டும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனா்.

போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும், முன்னெச்சரிக்கையாக மாநகராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை காலை போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் ஸ்ரீ சீதா- ராமா் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT