திருச்சியில் சாலையில் கிடந்த 5 பவுன் நகையை எடுத்து காவல்துறையில் ஒப்படைத்த பெரம்பலூா் நபரை காவல் ஆணையா் சு. காா்த்திகேயன் பாராட்டினாா்.
பெரம்பலூா் மாவட்டம் குன்னம் பகுதியைச் சோ்ந்தவா் சி. சுரேஷ்குமாா் (38). இவா், வெளிநாடு செல்வது தொடா்பாக, திருச்சி தில்லைநகா், சாலைரோடு பகுதியில் உள்ள முகவரைப் பாா்க்க சனிக்கிழமை வந்தபோது, சாலையில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை கண்டெடுத்து, உறையூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து அந்த நகை யாருடையது என போலீஸாா் விசாரிக்கின்றனா்.
நகையை நோ்மையாக ஒப்படைத்த சுரேஷ்குமாரை, திருச்சி மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் ஞாயிற்றுக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.