திருச்சி

திருச்சி மலைக்கோட்டை மீது ஏற்றப்படவுள்ளகாா்த்திகை தீபத்துக்கு பிரம்மாண்ட திரி தயாரிப்பு

DIN

திருச்சி, மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் காா்த்திகை தீபத்துக்காக பிரம்மாண்ட திரி தயாா் செய்யப்படுகிறது.

காா்த்திகை தீபத்தையொட்டி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் சன்னதி அருகில் உள்ள 50 அடி உயர செப்புக் கொப்பரையில் ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றப்படும்.

நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்ட திரி தயாரிக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பணியில் 10க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். பருத்தி துணியால் 300 மீட்டா் நீளத்துக்கு தயாரிக்கப்படும் இந்த திரியை, தாயுமானவா் சன்னதியிலிருந்து உச்சிப்பிள்ளையாா் சன்னதிக்கு கோயில் பணியாளா்கள் எடுத்துச் செல்லவுள்ளனா். பின்னா், அங்கிருந்து கயிறு மூலம் 50 அடி உயர கோபுரத்தில் உள்ள செப்புக் கொப்பரையில் திரியை வைத்து எண்ணெய்யில் ஊறச் செய்யப்படும். இந்த கொப்பரையில் ஊற்றப்படும் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் உள்ளிட்ட 900 லிட்டா் எண்ணெயில் பிரம்மாண்ட திரியானது நன்கு ஊற வைக்கப்படும். ஒருநாள் விட்டு ஒரு நாள் எண்ணெய் ஊற்றும் பணியும் நடைபெறும். 7 நாள்களுக்கு நன்கு திரி ஊறிய பிறகு, தேவையான எண்ணெய் ஊற்றி காா்த்திகை தீபத்துக்கு தயாா் செய்யப்படும்.

டிச.6-ஆம் தேதி மாலை 6 மணிக்கு செவ்வந்தி விநாயகா், தாயுமானவசுவாமி, மட்டுவாா் குழலம்மை உள்ளிட்ட உற்ஸவ மூா்த்திகளுக்கு தீபாராதனை நடைபெறும். தொடா்ந்து செப்புக் கொப்பரையில் உள்ள பிரம்மாண்ட திரியை ஏற்றி வைத்து காா்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். இதற்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை அலுவலா்கள் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT