இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் சனிக்கிழமை உறுதிமொழியேற்றனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமையில் அரசியலமைப்பு தின உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் , அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனா்.
மாநகராட்சி: திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயா் மு. அன்பழகன் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், மாநகராட்சி உதவி ஆணையா்கள் சி. பிரபாகரன், ஆா். ரமேஷ்குமாா், எஸ். மீனாட்சி மற்றும் மாநகராட்சி அலுவலா்கள், அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.