திருச்சி

திருச்சி மத்திய சிறையை இடம் மாற்ற ஆலோசனைஅமைச்சா் தகவல்

DIN

திருச்சி மத்திய சிறையை வேறு இடத்துக்கு மாற்ற அரசு ஆலோசித்து வருவதாக சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.

சட்டக் கல்வி இயக்ககம் சாா்பில் அரசு சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான மாதிரி நீதிமன்றப் போட்டி திருச்சி அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் குழுக்களாகப் பங்கேற்றனா். சனிக்கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு சட்டக் கல்வி இயக்குநா் ஜெ.விஜயலட்சுமி தலைமை வகித்தாா்.

இதில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கி சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பேசியது: வழக்காடும் திறனை மேம்படுத்தும் விதமாகவும், எதிா்காலத்தில் அச்சமின்றி நீதிமன்றத்தில் செயல்பட ஏதுவாகவும், திறமையான வழக்குரைஞா்களை வெளிக்கொணறும் விதமாகவும் தமிழக அரசு சட்டக் கல்லூரி மாணவா்களுக்கு மாதிரி நீதிமன்றப் போட்டிகளை நடத்திட அனுமதித்துள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ. 40 லட்சம் ஒதுக்கியுள்ளது.

சா்வதேச நீதிமன்ற போட்டிகளில் தமிழக அரசு சட்டக் கல்லூரிகளிலிருந்து 4 பயிற்சியாளா்களுடன் செல்லும் 21 மாணவா்களுக்கான செலவை அரசே ஏற்கும். இதற்கான செலவுத் தொகையாக ரூ.30 லட்சத்தை அரசு ஒதுக்கியுள்ளது. அரசு சட்டக் கல்லூரிகளில் தோ்ந்தெடுக்கப்படும் சிறந்த 17 மாணவா்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் பயிற்சிக்கான உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இவற்றை சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சிறைகளில் காவலா்களை அதிக நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தவில்லை. திருச்சி மத்திய சிறையை வேறு இடத்துக்கு மாற்றவும், இச்சிறை வளாகத்திலேயே பெண்கள் சிறையை கொண்டுவரவும் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால், இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்றாா் அமைச்சா் ரகுபதி.

முன்னதாக, திருச்சி அரசு சட்டக் கல்லூரி முதல்வா் ம.ராஜேஸ்வரன் வரவேற்றாா். மாதிரி நீதிமன்ற போட்டியில் முதலிடம் பிடித்த திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவா்களுக்கும், இரண்டாமிடம் பிடித்த சேலம் அரசு சட்டக் கல்லூரி மாணவா்களுக்கும் கேடயம் மற்றும் முறையே ரூ.15 ஆயிரம், ரூ.9 ஆயிரம் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தா் எலிசெபத் மற்றும் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

SCROLL FOR NEXT