இலங்கையிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகள் முறைகேடாக கடத்தி வந்த 373 கிராம் தங்கம் மற்றும் 4 கைப்பேசிகளை சுங்கத்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
இலங்கையிலிருந்து வியாழக்கிழமை மாலை திருச்சி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் 4 பயணிகள் முறையான அனுமதி பெறாமல், மொத்தம் ரூ. 19.60 லட்சம் மதிப்புள்ள 373 கிராம் தங்கம், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 4 கைப்பேசிகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.