திருச்சி

திருப்பைஞ்ஞீலி அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா

15th Nov 2022 01:21 AM

ADVERTISEMENT

திருப்பைஞ்ஞீலி அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் தியாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் ச.பிரபு சிறப்புரையாற்றினாா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் சிவராஜ், பள்ளி தலைமையாசிரியா் ஜெயச்சந்திரன், மண்ணச்சநல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாா்வதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT