திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த தமிழக ஆளுநா் ஆா்.என். ரவிக்கு மாவட்ட மற்றும் மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த அவருக்கு பூங்கொத்து கொடுத்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ. முஜிபுா் ரகுமான், மாநகரக் காவல் ஆணையா் க. காா்த்திகேயன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் ஆகியோா் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வரவேற்றனா். இதையடுத்து ஆளுநா் காா் மூலம் திருவாரூா் புறப்பட்டு சென்றாா். இதையொட்டி, திருச்சி - தஞ்சை சாலையில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.