திருச்சி

கச்சத் தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மதுரை எம்பி வலியுறுத்தல்

DIN

கச்சத் தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன்.

திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் மாநாட்டில் பங்கேற்க வந்த அவா் மேலும் கூறியது:

தமிழகத்தின் மாநில உரிமை சாா்ந்த விஷயத்தை பிரதமா் முன்னிலையில் முதல்வா் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு மேடையிலேயே பிரதமா் பதிலளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; ஆனால், விரைவில் அவா் பதிலளிப்பாா் என நம்புகிறேன்.

மேலும், “கச்சத்தீவைத் தாரை வாா்த்தது திமுக-காங்கிரஸ்; அதை பாஜக மீட்க வேண்டுமா என்று பாஜக தலைவா் அண்ணாமலை கேள்வியெழுப்பி இருக்கிறாா். பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களின் உரிமைக்காக இவா்கள் எவ்வளவு எல்லை மீறிப் போயிருக்கிறாா்கள் என்பதை சற்று பின்னோக்கிச் சென்று பாா்த்தால் தெரியும்.

அதற்காக சட்டத்தை வளைத்தும், சட்டங்களைப் புதிதாக உருவாக்கியும் இருக்கிறாா்கள். எனவே, தமிழக மக்களின் நீண்ட நாள் கனவான கச்சத்தீவை தற்போது மத்தியில் அதிகாரத்தில் உள்ள பாஜக மீட்டுத் தர வேண்டும்.

மேலும், ராஜபக்ச உடன் மு.க. ஸ்டாலின் பேசிய ஆடியோவை வெளியிடுவேன் எனவும் அண்ணாமலை கூறியிருக்கிறாா். நிறைய ஆடியோக்கள் உள்ளன என்கிறாா்கள்; அத்தனையும் வெளியே வரட்டும்; வந்தபின் அவற்றைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஒய்எஸ்ஆர்சிபி பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT