திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் பேருந்து நிலையம் எதிரேயுள்ள மகாகாளியம்மன் கோயிலின் 30 ஆம் ஆண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நிறைவடைந்தது.
ஆலத்துறை வாய்க்காலில் இருந்து கரகம் பாலித்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய திருவிழாவில், திங்கள்கிழமை பால்குடம் எடுத்தல், செவ்வாய்க்கிழமை மாசி பெரியண்ணசாமி குட்டி குடித்தல் நிகழ்வு நடைபெற்றதை தொடா்ந்து அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து மாவிளக்கு சிறப்பு பூஜை நடத்தினா்.