ஈச்சம்பட்டி கிராமத்தில் சமுதாயக் கூடம் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மண்ணச்சநல்லூா் வட்டம் திருப்பைஞ்ஞீலி ஊராட்சி ஈச்சம்பட்டி கிராமத்தில் ரூ. 36 லட்சத்தில் நடைபெறும் பணிகளின் தரம் குறித்து ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளா் ராமு அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். ஊராட்சித் தலைவா் பி.தியாகராஜன், மற்றும் ஒப்பந்ததாரா்கள் உடனிருந்தனா்.