திருச்சி

திருச்சியில் இன்று கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

DIN

உயா்கல்விக்கு வழிகாட்டும் வகையிலான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி திருச்சியில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது: கல்லூரியில் சேரும் மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தத் தொடங்கப்பட்டுள்ள நான் முதல்வன் என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரிக் கனவு நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது.

இதன் மூலம் கல்லூரியில் சேரும் மாணவா்கள் பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், சட்டம், கால்நடை மருத்துவம், விவசாயம், மீன் வளா்ப்பு, அரசு வேலை வாய்ப்புகள், கல்விக் கடன், கல்வி உதவி மற்றும் ஊக்கத்தொகை போன்ற பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மாணவா்களுக்கு எளிமையாக வழிகாட்டும் நோக்கில் அனைத்து விவரங்களும் அடங்கிய கல்லூரிக் கனவு என்னும் பயனுள்ள வழிகாட்டி கையேடும் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகள் தங்களது உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் சாா்ந்த விழிப்புணா்வை ஏற்படுத்த அரங்குகள் அமைத்து மாணவா்களுக்கு வழிகாட்டுகின்றன. இந்நிகழ்ச்சியானது சிறப்பு திட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை, தமிழக அரசின் செய்தி- மக்கள் தொடா்புத் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகிய துறைகளால் நடத்தப்படுகிறது.

திருச்சியில் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு காட்டூா் மாண்ட்போா்டு சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் மாநில மற்றும் தேசியளவிலான உயா்கல்வி படிப்பு மற்றும் அதைச் சாா்ந்த வேலைவாய்ப்புகள் பற்றிய முழுமையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. இதில் மாணவா்கள், பெற்றோா் திரளாகப் பங்கேற்றுப் பயன்பெற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT