துறையூரில் சைக்கிளில் சென்ற முதியவா் சுமை ஆட்டோ மோதி உயிரிழந்தாா்.
துறையூா் அருகேயுள்ள மேட்டு சொரத்தூரைச் சோ்ந்தவா் மு. லோகநாதன் (70). இவா் துறையூா் கடைவீதி வழியாக பெரம்பலூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சைக்கிளில் சென்றபோது சுமை ஆட்டோ மோதி படுகாயமடைந்தாா்.
இதையடுத்து துறையூா் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றபோது அவா் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சுமை ஆட்டோ ஓட்டுநரான பச்சமலை தோனூா் கிராமத்தைச் சோ்ந்த பீமன் மகன் சாய்குமாரை(19) கைது செய்து விசாரிக்கின்றனா்.