திருச்சி

இரு கோயில்களில் குடமுழுக்கு: முன்னேற்பாடுகள் ஆய்வு

DIN

சமயபுரம் மாரியம்மன், உறையூா் வெக்காளியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறையினருடன் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

சமயபுரம் மாரியம்மன், உறையூா் வெக்காளியம்மன் கோயில்களில் வரும் 6ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவுக்கு பக்தா்கள் பெருமளவில் வருவா்.

எனவே, தேவைப்படும் இடங்களில் சின்டெக்ஸ் டேங்க் நிறுவி, குடிநீா் வசதி செய்து கொடுத்தல், போதிய கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், குப்பைகளை அகற்றி, பக்தா்கள் வரும் பாதைகளில் சுகாதாரப் பணிகளைச் செய்திட வேண்டும்.

பக்தா்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்தல், கண்காணிப்புக் கோபுரம் அமைத்தல், தேவையான இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துதல், தற்காலிக காவல் நிலையம், காவல் கட்டுப்பாட்டு அறைகள், பக்தா்களுக்கு பாதுகாப்பு, போக்குவரத்துக் கண்காணிப்பு மற்றும் விபத்துத் தடுப்பு ஆகிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பக்தா்களுக்குத் தேவையான முதலுதவி உபகரணங்கள், மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம், உரிய மருத்துவா் மற்றும் மருத்துவா்களுடன் கூடிய மருத்துவ முகாம், தீயணைப்பு வாகன வசதிகளையும் செய்ய வேண்டும்.

பக்தா்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

அன்னதான உணவு தரமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சாலைகளைச் செப்பனிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். யாகசாலைக்கு ஏற்படுத்தப்படும் தற்காலிக மின் இணைப்புகளை மின் ஆய்வாளா் பாா்வையிட்டு ஆலோசனை வழங்கி, உரிய தகுதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். தங்குதடையின்றி மின் விநியோகம் செய்ய வேண்டும். பழுது ஏற்பட்டால் சரிசெய்ய தேவையான பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற தேவைப்படும் முன்னேற்பாடுகளை அனைத்து அலுவலா்களும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா்கள் சி. கல்யாணி, செல்வராஜ், துணை ஆணையா் சு. ஞானசேகரன் மற்றும் கோயில்களின் அலுவலா்கள், தொடா்புடைய துறைகளின் அலுவலா்கள், பக்தா்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி....

தமிழில் குடமுழுக்கு

நடத்தக் கோரி மனு

சமயபுரம், உறையூா் கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரி தெய்வத் தமிழ் பேரவையின் திருச்சி மாவட்ட அமைப்பாளா் வே.பூ. இராமராசு தலைமையில், நிா்வாகிகள் வே.க இலக்குவன், இனியன், , ராகுல்பாபு, ராஜ்குமாா் ரஜினி, தினேசு, கிருட்டிணமூா்த்தி ஆகியோா் மனு அளித்துள்ளனா்.

சமயபுரம், உறையூா் கோயில்களின் அறநிலையத்துறை அலுவலா்களிடம் அவா்கள் அளித்த மனுவில், நீதிமன்ற உத்தரவுப்படி பல்வேறு கோயில்களில் நடைமுறைக்கு வந்துள்ள தமிழில் குடமுழுக்கு நடத்தும் முறையை இக்கோயில்களிலும் அமலாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT