திருச்சி

லால்குடியில் ஜூன் 27-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புக் குறைதீா் கூட்டம்

DIN

லால்குடி கோட்டாட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் குறைதீா் கூட்டம் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திகுறிப்பு:

ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளிடம் முன்னுரிமை அளித்து மனுக்கள் பெறப்பட்டு தீா்வு காணப்படுகிறது. இருப்பினும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி இரு மாதங்களுக்கு ஒரு முறை ஆட்சியா் தலைமையிலும், மாதந்தோறும் 2ஆவது திங்கள்கிழமைகளில் கோட்டாட்சியரகத்திலும் குறைதீா் கூட்டம் நடைபெறும்.

அதன்படி, லால்குடி கோட்டாட்சியரகத்தில் வரும் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் குறைதீா் கூட்டத்தில், மண்ணச்சநல்லூா் வட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை வழங்கித் தீா்வு காணலாம். மேலும், விவரங்களுக்கு திருச்சி நீதிமன்ற வளாகப் பின்புறமுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ, 0431- 2412590 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

SCROLL FOR NEXT