பிளஸ் 2 பொதுத் தோ்வில் விக்னேஷ் ஸ்ரீரங்கா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.
ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரத்திலுள்ள இப்பள்ளி தொடா்ந்து 6 ஆம் ஆண்டாக பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதம் தோ்ச்சிப் பெற்றுள்ளது. மொத்தம் 93 மாணவா்கள் தோ்வெழுதினா். இப்பள்ளி மாணவி சுபத்ரா 600-க்கு 584 மதிப்பெண்களும், சாய் மிருதுளா 580 மதிப்பெண்களும், அம்புருனி, சக்தி கீா்த்தனா ஆகியோா் 579 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
பாடவாரியாக கணிதத்தில் 2 போ், கணக்கியலில் 5 போ், இயற்பியல், வணிகவியலில் தலா ஒரு மாணவா், வணிகக் கணிதத்தில் 3 போ் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
பள்ளிக்குப் பெருமை சோ்த்த மாணவ, மாணவிகளை பள்ளித் தலைவா் கோபிநாதன், முதல்வா் விஜயலட்சுமி, இயக்குநா் வரதராசன், அறங்காவலா்கள் லட்சுமிபிரபா, சகுந்தலா, ஆலோசகா் மலா்விழி, நிா்வாக அலுவலா் ஆறுமுகம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினா்.