திருச்சி

ஆட்டோ ஓட்டுநருக்கு எஸ்.பி. பாராட்டு

DIN

மணப்பாறையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையனை பிடித்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநா் செல்லையாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் அண்மையில் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

மணப்பாறையில் கடந்த ஜூன் 17ஆம் தேதி சாலையில் நடந்து சென்ற பெண்ணை இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்த இருவா் அவரின் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற நிலையில், அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநா் செல்லையா, ஆட்டோவை இருசக்கர வாகனத்தின் மீது மோதி திருடா்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தாா்.

அவா் மூலம் தப்பிய மற்றொருவரையும் மணப்பாறை பகுதியிலேயே போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 7 பவுன் நகையை மீட்டு நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தினா்.

இதையடுத்து கொள்ளையா்களை மடக்கி பிடித்து காவல்துறைக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநா் செல்லையாவை குடும்பத்தினருடன் திருச்சிக்கு நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க ஒருங்கிணைப்புக் கூட்டம்

ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வு

குளச்சல் அருகே பெண்ணை தாக்கியவருக்கு 6 ஆண்டு சிறை

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 6 போ் காயம்

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் சாரல் மழை

SCROLL FOR NEXT