திருச்சி

அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை நபா் தீக்குளிப்பு

DIN

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சோ்ந்தவா் வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

திருச்சி மத்திய சிறை வளாக அகதிகள் சிறப்பு முகாமிலுள்ள வெளிநாட்டுக் கைதிகளில் இலங்கையைச் சோ்ந்த சுமாா் 10-க்கும் மேற்பட்டோா் தண்டனைக் காலம் முடிந்தும் அல்லது முறையான விசாரணையின்றியும் நீண்ட நாள்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்கக் கோரி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

அவா்களில் 5 போ் வெள்ளிக்கிழமை மரங்களில் ஏறிப் போராட்டம் மேற்கொண்ட நிலையில், இலங்கையைச் சோ்ந்த கந்தசாமி மகன் ரமணன் (41) வண்ணம் பூசப் பயன்படுத்தும் தின்னா் திரவத்தை ஊற்றித் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அவா் மீட்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சம்பவம் குறித்து கேகே நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT