திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் இலங்கை தமிழர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

திருச்சி அரசு மருத்துவமனையில் இலங்கை தமிழர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது. 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தண்டனை குற்றவாளிகளான இலங்கை தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி கடந்த 36 நாளாக உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை இலங்கை தமிழர்கள் நான்கு பேர் மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்‌‌.

விசா முடிந்து தற்போது சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள உமா ரமணன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி நெருப்பை பற்ற வைத்துக் கொண்டார்.  உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக தீக்காயமடைந்த இலங்கைத் தமிழர் உமா ரமணனை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலர் தூக்கமாத்திரை உட்கொண்டனர். அவர்களும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில்  இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் இலங்கை தமிழர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT