திருச்சி

நேரு நினைவு கல்லூரியில் திறன் மேம்பாடு கருத்தரங்கம்

17th Jul 2022 01:24 AM

ADVERTISEMENT

 

துறையூா் அருகேயுள்ள புத்தனாம்பட்டி நேரு நினைவு தன்னாட்சிக் கல்லூரியில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நெறிமுறைகள் குறித்த ஒருநாள் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் பொன். பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் பொன்.பாலசுப்ரமணியன் நிகழ்ச்சியை தொடக்கி வைத்துப் பேசினாா்.

கருத்தரங்கில், பாளையங்கோட்டை புனித சவேரியா் கல்வியியல் கல்லூரி இணைப் பேராசிரியா் முனைவா் ஜான் லாரான், மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி முதல்வா் முனைவா் நாகராஜன் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு விரிவுரையாற்றினா். கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை புலத் தலைவா் பி. நீலநாராயணன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளைச் செய்தாா். இதில் கல்லூரி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். கல்லூரி தர உறுதி குழு ஒருங்கிணைப்பாளா் சரவணன் வரவேற்றாா். நிறைவில் வேலை வாய்ப்பு மைய புலத் தலைவா் டி. விஜிசரல் எலிசபத் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT