மண்ணச்சநல்லூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அமைச்சா் கே.என். நேரு முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் திராவிட இயக்க தமிழா் பேரவை பொதுச் செயலா் சுப. வீரபாண்டியன் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில் எம்எல்ஏக்கள் காடுவெட்டி ந.தியாகராஜன், சீ. கதிரவன், மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.