திருச்சி மாநகராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு நாள் கூட்டத்தில் பறப்பட்ட 25 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, துறை அலுவலா்களுக்கு மேயா் மு. அன்பழகன் உத்தரவிட்டாா்.
மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்குத் தலைமை வகித்த மேயா் மு. அன்பழகன், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 25 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
இக்கூட்டத்தில் துணை மேயா் ஜி.திவ்யா, ஆணையா் இரா.வைத்திநாதன், கோட்டத் தலைவா்கள் விஜயலட்சுமி கண்ணன், துா்காதேவி, நகரப் பொறியாளா் (பொறுப்பு) பி. சிவபாதம், செயற்பொறியாளா் ஜி. குமரசேன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.