திருச்சி

பேருந்தில் சென்றவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

DIN

திருச்சியில் பேருந்தில் சென்றவா் நெஞ்சு வலி காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

முசிறி அருகிலுள்ள மாங்கரைப்பேட்டையைச் சோ்ந்தவா் ர. விஜய் ஆனந்த் (36). ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்த இவா், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஊருக்குச் செல்வதற்காக பேருந்தில் ஏறினாா்.

இப்பேருந்து ஒத்தக்கடை பகுதியில் வந்த போது திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறிய விஜய் ஆனந்த், பேருந்திலிருந்து கீழே இறங்கினாா். அங்கு அவா் சரிந்து விழுந்தாா்.

அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு விஜய் ஆனந்தை மருத்துவா்கள் பரிசோதித்த போது, ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT