திருச்சி

நாளை சமயபுரம் கோயில் குடமுழுக்கு!

DIN

மண்ணச்சநல்லூர்: சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் இராஜ கோபுர குடமுழுக்கு விழா யாகசாலை பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம்  மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் இத்திருக்கோயிலில் இராஜகோபுர குடமுழுக்கு விழா நாளை ஜூலை 6-ம் தேதி காலை 6.45 மணி அளவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் குடமுழுக்கு விழாவானது ஜூலை 3-ம் தேதி வாஸ்து சாந்தி, தன பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகளோடு தொடங்கியது. ஜூலை 4-ம் தேதி தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. மேலும் கும்ப அலங்காரம், அங்குரார்ப்பணம் பூஜையோடு முதல் கால யாக வேள்வியும், பூர்ணாஹூதியும் அதனையடுத்து தீபாரதனை நடைபெற்றது. 

ஜூலை 5-ம் தேதியான இன்று இரண்டாம் கால யாக வேள்வி, திரவ்யா ஹீதியும், தீபாரதனையும் நடைபெற்றது.

ராஜகோபுரமானது 7 நிலைகளை கொண்டு, கலைநயமிக்க சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு, அழகுற வண்ணம் பூசப்பட்டு உள்ளது. ராஜகோபுரத்தில் 7 செம்பு கலசங்கள் திங்கட்கிழமை பொருத்தப்பட்டது

குடமுழுக்கு விழாவையொட்டி ராஜகோபுர மற்றும் திருக்கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மேலும் இராஜகோபுர குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதால் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வருக்கு மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் நன்றி

ஆதினத்துக்கு மிரட்டல்: கல்வி நிறுவன நிா்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்: அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவா் டி.லட்சுமி நாராயணன் காலமானாா்

SCROLL FOR NEXT