திருச்சி ஜங்ஷன் பகுதியில் முறைகேடாக மது விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சியில் ஜங்ஷன் ரயில் நிலையத்தையொட்டிய சில இடங்களில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு அரசு மதுவை விற்பதாக கி
டைத்த தகவலின்பேரில் கண்டோன்மெண்ட் உதவி ஆணையா் அஜய் தங்கம் தலைமையில் அப்பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது ஜங்ஷன் அருகிலுள்ள மதுக் கடை அருகே முறைகேடாக மது விற்ற இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 150 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.