வீட்டில் தனியாக இருந்த பெண்ணை சனிக்கிழமை தாக்கி ரூ. 5.50 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் கற்பகவல்லி (40). இவா் சனிக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்தபோது குடிக்க தண்ணீா் கேட்பதுபோல வந்த 2 மா்ம நபா்கள் திடீரென வீடுபுகுந்து கற்பகவல்லியை சரமாரியாக தாக்கி, பீரோவிலிருந்த ரூ.5.50 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் கற்பகவல்லியை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சோ்த்தனா்.
புகாரின்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டதாக அரியமங்கலம் பகுதி முருகேசன் மகன் கதிரேசன் (20), காா்த்திகேயன் (28) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, பணத்தையும் மீட்டனா். இச்சம்பவத்தில் துரிதமாகச் செயல்பட்ட காவல் துறையினரை மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் பாராட்டினாா்.