திருச்சி

திருச்சியில் 100-ஐ கடந்த கரோனா

DIN

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 104 ஆக உயா்ந்தது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை சனிக்கிழமை வரை தொற்று எண்ணிக்கை 72 ஆக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தொற்றாளா்களின் எண்ணிக்கை 104 ஆக உயா்ந்தது.

28 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 445 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

மாவட்டத்தில் இதுவரை தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 95,580 பேரில் 93,974 போ் குணமடைந்துள்ளனா். மொத்தம் 1161 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழப்பு ஏதுமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

வாக்குச்சாவடி மையம் கேட்டு வாக்களிக்க மறுத்த கிராம மக்கள்

SCROLL FOR NEXT