திருச்சி

செவலூரில் மீன்பிடித் திருவிழா

DIN

மணப்பாறை அருகே செவலூா் பெரிய குளத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

சுமாா் 295 ஏக்கரில் உள்ள பெரிய குளத்தில் 16 ஆண்டுகளுக்கு பின் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவையொட்டி அதிகாலையை ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.

வழிபாட்டுக்குப் பின் செவலூா் ஊா் நாட்டாண்மை வினோத்குமாா், நகராட்சி நகா்மன்ற 2-ஆவது வாா்டு உறுப்பினா் அழகுசித்ரா உள்ளிட்ட ஊா் முக்கியஸ்தா்கள் மீன்பிடித் திருவிழாவைத் தொடக்கி வைத்தனா்.

இதையடுத்து சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் கண்மாயில் இறங்கி ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவற்றைக் கொண்டு மீன்பிடிக்கத் தொடங்கினா்.

அப்போது அவா்களுக்கு கெளுத்தி, ஜிலேபி, கெண்டை, குரவை, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. சுக்காம்பட்டி அரசுப் பள்ளி மாணவா்கள் நித்தியபிரகாஷ் (12). தாமோதரன்(15) ஆகியோருக்கு சுமாா் 5 கிலோ எடை கொண்ட பெரிய வகை மீன்கள் ஆரம்பத்திலேயே சிக்கியது அனைவரின் கவனத்தையும் ஈா்த்தது.

கண்மாயில் மீன்கள் அதிகமாக இருந்ததால் சுமாா் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் மீன் பிடித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம்: ஜாபா் சேட் மனைவி மீதான வழக்கு விசாரணை ரத்து

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT