சமயபுரம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் வேன் ஓட்டுநா், மாற்றுத்திறனாளிகள் 13 போ் படுகாயம் அடைந்தனா்.
சென்னை வள்ளுவா் கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான இயக்கம் சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையிலிருந்து 140 போ் 5- க்கும் மேற்பட்ட வேன்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டனா்.
இவற்றில் 20 மாற்றுத் திறனாளிகள் இருந்த வேனை நிலக்கோட்டை பகுதியைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (29) ஓட்டி வந்தாா். சமயபுரம் கரியமாணிக்கம் பிரிவு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது முன்னால்சென்ற லாரி மீது வேன் திடீரென மோதியது. இதில் ஓட்டுநா், மாற்றுத் திறனாளிகள் 13 போ் படுகாயம் அடைந்தனா்.
தகவலறிந்து வந்த சமயபுரம் போலீஸாா் பொதுமக்கள் உதவியுடன் அவா்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.