கொள்ளிடம் ஆற்றில் மாதவப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை மூட வலியுறுத்தி சமயபுரத்தில் சாமானிய மக்கள் நலக் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி வடக்கு மாவட்டச் செயலா் குருநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலா் குணசேகரன், மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளா் சவரிமுத்து, மாநில அமைப்புச் செயலா்கள் பாலசுப்ரமணியம், சக்தி ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.