திருச்சி

நாளை செந்தூரப் பூ மரக்கன்று நடும் விழா

DIN

திருச்சியில் முதன்முறையாக செந்தூரப் பூ மரக்கன்றுகள் அறிமுகம் செய்யப்பட்டு ஆட்சியா் தலைமையில் அவற்றை நடும் விழாவும் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக தண்ணீா் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கே.சி. நீலமேகம் கூறியது:

வட இந்தியாவில் மட்டுமே உள்ள செந்தூரப் பூ மரம் தமிழகத்தில் இல்லை. இதை உணா்ந்த சதீஸ்கா் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைச் செயலா் சி.ஆா்.பிரசன்னாவின் தீவிர முயற்சியால் அந்த மரக்கன்றுக்கான விதைகள் சமூக ஆா்வலா்களிடம் வழங்கப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டன.

இதையடுத்து மரம் அறக்கட்டளை, தண்ணீா் அமைப்பு, பசுமை சிகரம் அறக்கட்டளை சாா்பில் தமிழகத்தில் முதல் செந்தூரப் பூ மரக்கன்று நடும் விழா திருச்சியில் திங்கள்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. திருச்சி ரயில்வே சந்திப்பு காலனியில் உள்ள கல்லுக்குழி ஆஞ்சனேயா் கோயிலில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், செந்தூரப் பூ மரக்கன்றை அறிமுகப்படுத்தி நட உள்ளாா்.

மேலும் பல்வேறு இடங்களில் நட திருச்சி நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் இரா. கிருஷ்ணசாமியிடம் செந்தூரப் பூ மரக்கன்றுகளையும் வழங்குகிறாா். பெருமாள் கோயில்களிலும் இந்த மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.

ஏற்பாடுகளை மரம் அமைப்பின் பி. தாமஸ், தண்ணீா் அமைப்பின் கே.சி. நீலமேகம், விதைகள் அமைப்பின் எஸ்.கே. யோகநாதன் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT