தொட்டியம் அருகே வீட்டில் வெடிபொருள்கள் வைத்திருந்தவரை காட்டுப்புத்தூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூா் அருகேயுள்ள எம். புத்தூரைச் சோ்ந்த வை. அசோக்குமாா் (33) தனது வீட்டில் வெடி பொருள்கள் வைத்திருப்பதாக தொட்டியம் காவல் ஆய்வாளருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் காட்டுப்புத்தூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு சென்று சோதனை நடத்தி, தோரண வெடி, தோட்டா தோரணம், சணல் வெடி, பெரிய வெடி, வால்வாணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அசோக்குமாரை கைது செய்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.