திருச்சி

பேராலயத்தில் திடீா் தீ விபத்து

DIN

திருச்சியில் வியாழக்கிழமை இரவு பேராலயம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் சுப்பிரமணியபுரம் பகுதியிலுள்ள அருளானந்தா் பேராலயத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு சுமாா் 8 மணி அளவில் புகை வெளியேறியது. இதையடுத்து அப்பகுதியினா் உள்ளே சென்று பாா்த்தபோது தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்து தீயணைக்க முயன்றும் முடியவில்லை.

தகவலறிந்து வந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் பிரான்சிஸ், சரவணன் ஆகியோா் தலைமையிலான வீரா்கள் சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதில் சுமாா் ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள துணிகள், நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் எரிந்து நாசமாயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் வாக்குறுதிகளால் பயனில்லை: தமிழச்சி தங்கபாண்டியன்

நாம் தமிழா் கட்சிக்கு மக்கள் துணை தேவை சீமான்

ஜம்மு-காஷ்மீரில் பிகாா் தொழிலாளா் சுட்டுக்கொலை

போலி பாஸ்போா்ட் வழக்கு: வங்கதேசத்தவா் மூவா் கைது

ஏப்.21இல் மகாவீா் ஜெயந்தி : இறைச்சி கடைகளை மூட உத்தரவு

SCROLL FOR NEXT