திருச்சி அருகே அடுத்தடுத்த 13 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருள்களைத் திருடிச் சென்றனா்.
திருவெறும்பூா் காவல் நிலையம் அருகே கூத்தைப்பாா் பேரூராட்சிக்குச் சொந்தமான பழைய பேருந்து நிலையப் பகுதியில் சுமாா் 100 கடைகள் உள்ளன. இந்நிலையில் புதன்கிழமை இரவு இங்குள்ள மின்சாதன விற்பனை கடை, பிரிண்டிங் பிரஸ், இருசக்கர வாகனப் பழுது நீக்கும் கடை, பேட்டரி கடை உள்ளிட்ட 13 கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் உள்ளே இருந்த பணம், பொருள்களைத் திருடிச் சென்றனா்.
தகவலறிந்து வந்த திருவெறும்பூா் போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இந்த பகுதியில் 24 மணி நேரமும் கிடைக்கும் மதுவால் மதுபிரியா்களின் வருகை எப்போதும் உள்ளதாலும், போதிய வெளிச்சமின்மையாலும் சமூக விரோதிகள் இத்திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என அப்பகுதி கடை உரிமையாளா்கள் தெரிவித்தனா். இந்தப் பகுதியில் இருந்து காவல் நிலையம் சுமாா் 200 மீட்டா் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.