திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ. முஜிபூர் ரஹ்மான், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்.19-ம் தேதி நடைபெறவுள்ளது. திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளுக்கான உறுப்பினர் தேர்தல், இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு மற்றும் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ-அபிஷேகபுரம் ஆகிய கோட்ட அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்யும் வார்டுகள் மற்றும் அலுவலர்கள் விவரம், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கோட்ட வாரியான மையங்கள் உள்ளிட்ட விவரங்கள் அந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பான படிவம் 2 அரசு அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்காக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.