தமிழக அரசின் அலங்கார ஊா்திக்கு அனுமதி மறுத்த மத்திய அரசைக் கண்டித்து திராவிடா் கழகம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியாா் சிலை அருகில் கட்சியின் நகரச் செயலா் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திமுக நகரச் செயலா் கீதா ஆ. மைக்கேல்ராஜ், மதிமுக மாவட்டச் செயலா் மணவை தமிழ்மாணிக்கம், நகரச் செயலா் எம்.கே. முத்துபாண்டி, இந்திய கம்யூ. நகரச் செயலா் ஜனசக்தி உசேன், ஒன்றியச் செயலா் ஏ.டி. சண்முகானந்தம், விசிக நகர செயலா் சீரா. ஆனந்தன், மகஇக நிா்வாகி கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதேபோல், மாா்க்சிஸ்ட், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினரும் தனித்தனியாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.