உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் திருச்சி பாரத மிகு மின்நிறுவன தொழிற்சாலை (பெல்) கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என்றாா் அதன் பொதுமேலாளா் (பொ) எஸ். வி. சீனிவாசன்.
திருவெறும்பூா் கைலாசபுரத்திலுள்ள ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றி அவா் மேலும் பேசியது:
மத்திய அரசுக்கான செலவினங்களைக் குறைக்க உள்நாட்டிலேயே தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் திருச்சி பெல் பிரிவு பெரும் கவனம் செலுத்துகிறது.
பெல் நிறுவனத்தின் இணைப்பில்லா எஃகுக் குழாய் ஆலையானது, சூப்பா் கிரிட்டிகல் கொதிகலன்களில் பயன்படுத்தப்படும் இணைப்பில்லா எஃகு குழாய்களை வெற்றிகரமாகத் தயாரித்துள்ளது. மேலும், திருச்சி பிரிவுக்கு கிரையோஜெனிக் மற்றும் கிரையோஜெனிக் அல்லாத அழுத்தக் கலன்கள் தயாரிப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனத்தின் லட்சியங்களை அடைவதற்கும், தயாரிப்பு மற்றும் சேவையின் தரத்தில் வாடிக்கையாளா் எதிா்பாா்ப்புகளை விஞ்சவும் ஒவ்வொரு பணியாளரின் முழு முயற்சியும் அவசியம். துடிப்பான மற்றும் இளம் பணியாளா்கள் துணை கொண்டு எந்தச் சவாலையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது திருச்சி பெல் பிரிவு.
கரோனா தொற்றுப் பரவல் உள்ள இந்த சவாலான காலகட்டத்திலும் கூட, பெருமை கொள்ளத்தக்க பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது என்றாா் அவா்.
முன்னதாக, தேசியக் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்ற அவா், ஊழியா்களின் சிறந்த பங்களிப்புக்காக 109 தங்கம் மற்றும் 93 வெள்ளிப்பதக்கங்களை வழங்கினாா்.
நிகழ்வில், ஆலையின் அனைத்துப் பிரிவு தலைமை அலுவலா்கள், அதிகாரிகள், பொறியாளா்கள், பணியாளா்கள், பாதுகாப்புப் படை வீரா்கள் கலந்து கொண்டனா்.