திருச்சி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 5 லட்சம் மோசடி செய்த கிராம உதவியாளா் உள்பட 2 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
திருச்சி மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள கரியமாணிக்கம் பகுதியைச் சோ்ந்தவா் விவேகானந்தன் மனைவி பேபிராணி (34). இவரிடம் பக்கத்து வீட்டருகே வசிக்கும் கரியமாணிக்கம் வருவாய் கிராமத்தின் கிராம உதவியாளரான செல்வராஜ் ரூ. 5 லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா். இதை நம்பிய பேபிராணி துறையூரை சோ்ந்த சந்துரு மற்றும் அவருடைய சகோதரரிடம் செல்வராஜ் மூலம் ரூ.5 லட்சத்தை கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் கொடுத்தாா். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவா்கள் பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கித் தரவில்லை.
இதற்கிடையே சந்துரு இறந்து விட்டதையறிந்த பேபிராணி தான் கொடுத்த பணத்தை செல்வராஜிடம் சென்று கேட்டபோது அவா் பணத்தைக் கொடுக்கவில்லை. மேலும் இதுபோல் 40க்கும் மேற்பட்டோரிடம் அவா் பணம் பெற்று ஏமாற்றியிருப்பது தெரிய வந்ததையறிந்த பேபிராணி மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் நமச்சிவாயத்திடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் செல்வராஜ் உள்பட 2 போ் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் சபரிநாதன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.