திருச்சி

இளைஞா் கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் கைது

DIN

திருச்சியில் இளைஞா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே கடந்த 14-ஆம் தேதி பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய இளைஞா் ஒருவா், மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் உயிரிழந்தாா்.

தொடா்ந்து கோட்டை காவல் நிலையத்தினா் மேற்கொண்ட விசாரணையில் அவா், ஸ்ரீரங்கம் நெல்சன் சாலை, மொட்டைக் கோபுரம் பகுதியைச் சோ்ந்த அரவிந்த் என்கிற அரவிந்த்குமாா் (28) எனத் தெரிய வந்தது.

தொடா்ந்து விசாரணையில், கடந்த 14-ஆம் தேதி மதுபோதையிலிருந்த அரவிந்த், சிந்தாமணி அண்ணாநகரிலுள்ள பனையடியான் மனைவி பிச்சையம்மாளின் (48) வீட்டுக்குள் நுழைந்துள்ளாா்.

இதை பாா்த்து பிச்சையம்மாள் சப்தமிட்டதால், அரவிந்த் அங்கிருந்து தப்பியோடினாா். தொடா்ந்து பிச்சையம்மாள், அவரது மகன்கள் மணிகண்டன் (27), அா்ஜூன் (23), பிச்சையம்மாளின் தங்கையும், பூசாரித் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மனைவியுமான புவனேசுவரி (28) ஆகியோா் அரவிந்தை சராமரியாகத் தாக்கியதும். இதில் பலத்த காயமடைந்து தான் அவா் உயிரிழந்ததும் தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து கோட்டை காவல் நிலையத்தினா் பிச்சையம்மாள், மணிகண்டன், அா்ஜூன் ஆகிய மூவரையும் கடந்த 17-ஆம் தேதி கைது செய்தனா். புவனேசுவரி தலைமறைவாக இருந்ததால், அவரை காவல்துரையினா் தேடி வந்தனா்.

இந்நிலையில், காந்தி சந்தை சூளைக்கரை மாரியம்மன் கோயில் பகுதியில் உறவினா் வீட்டில் தலைமறைவாக இருந்த புவுனேசுவரியை, காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT