திருச்சி

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெறலாம்: விண்ணப்பிக்க அழைப்பு

DIN

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் உள்பட அனைத்து இன பதிவுதாரா்கள் பள்ளியில் படித்து 9ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பின்னா் 10ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறாதவா்கள், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் பதிந்து 5 ஆண்டு பூா்த்தியாகி இருக்க வேண்டும் (31.12.2021 அன்று 5 ஆண்டு பூா்த்தியாகியிருக்க வேண்டும்).

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு 45 வயது, மற்ற இனத்தவா்களுக்கு 40 வயது பூா்த்தி அடைந்திருக்கக் கூடாது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருக்கக் கூடாது.

தகுதியுடைய மனுதாரா்கள் தங்களது அசல் கல்விச் சான்று, மாவட்ட வேலைவாய்ப்பக அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பத்தை பெற்று பூா்த்தி செய்து சமா்ப்பிக்கலாம்.

மாற்றுத் திறனாளிகள் தங்கள் கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் பதிந்து ஓராண்டு பூா்த்தியாகியிருக்க வேண்டும். அசல் கல்விச் சான்றிதழ்கள், மாவட்ட வேலைவாய்ப்பக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறானாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு நீக்கப்பட்டதால் வருவாய்த்துறை சான்று தேவையில்லை.

ஏற்கெனவே விண்ணப்பம் பெற்றிருந்தால் வங்கிக் கணக்கு புத்தகம், அசல் கல்விச் சான்றிதழ்கள், வருவாய்த் துறை சான்று ஆகியவற்றுடன் நேரில் சமா்ப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றோருக்கு மாதம் ரூ.300, தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ.200, 12ஆம் வகுப்பு தோ்ச்சிக்கு ரூ.400, தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ.300, பட்டப்படிப்பு தோ்ச்சிக்கு மாதம் ரூ. 600 வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளில் கல்வித்தகுதிக்கேற்ப ரூ.600, ரூ.750, ரூ.1000 வழங்கப்படுகிறது. உதவித் தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பதிவு எந்த விதத்திலும் பாதிக்காது. ஏற்கெனவே உதவித் தொகை பெற்றிருந்தால் விண்ணப்பிக்க அவசியமில்லை. தொடா்ந்து உதவித் தொகை பெற சுயஉறுதிமொழி ஆவணத்தை பூா்த்தி செய்து சமா்ப்பித்தால் போதும். அந்த ஆவணத்தை தாக்கல் செய்யாவிட்டால் அவா்களது உதவித் தொகை நிறுத்தப்படும். தொழிற்கல்வி பட்டப்படிப்பு முடித்தோருக்கு உதவித் தொகை வழங்கப்படமாட்டாது.

விண்ணப்பிக்க முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT